இந்நிலையில், சிறுமி தேஜஸ்வியை குளிக்க வைப்பதற்காக சீனிவாசன் நேற்று குளியல் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். சிறிது நேரத்தில், சிறுமி மயங்கி விட்டதாக கூறிய சீனிவாசன், தனது தோளில் சிறுமியை போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளார். அப்போது, சிறுமியின் தலை தொங்கியபடி இருந்துள்ளது. இதுபற்றி அப்பகுதி மக்கள் கேட்டபோது, பதில் ஏதும் சொல்லாமல் ஓடியதாக கூறப்படுகிறது.
அருகில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற சுகாதார மையத்திற்கு சென்று பரிசோதித்தபோது, சிறுமி ஏற்கனவே இறந்தது தெரிந்தது. மருத்துவமனை நிர்வாகம் சார்பில், இதுபற்றி புழல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு வந்த போலீசார், சிறுமியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து சீனிவாசன் மற்றும் திவ்யாவிடம் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, உண்மை நிலை தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது தண்ணீர் தொட்டில் முழுகி கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் 6 வயது சிறுமி அடித்துக்கொலை..? தாய், கள்ளக்காதலனிடம் விசாரணை appeared first on Dinakaran.