இதைத் தொடர்ந்து ஏப்.21ம் தேதி மாலை தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரை புறப்படுகிறார். ஏப்.23ம் தேதி தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். இந்த வைபவத்திற்காக அழகரின் தங்கக்குதிரை வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம் ஆகியவை தனித்தனியாக 3 டிராக்டர்களில் மதுரைக்கு இன்று காலை வந்து சேர்ந்தன. இவைகள் அனைத்தும் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. இந்த 3 வாகனங்களும் மதுரை சித்திரை திருவிழாவில் மட்டுமே பயன்படுத்தப்படும். பின்னர் அழகர் கோயிலுக்கு திரும்பக் கொண்டு செல்லப்படும்.
The post அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக மதுரை வந்தது தங்கக் குதிரை வாகனம் appeared first on Dinakaran.