எனது வீட்டின் முன்பு பூலாவரியை சேர்ந்த பாலு என்பவர் நேற்று ஜேசிபி எந்திரம் மூலம் குழி தோண்டிக்கொண்டிருந்தார். அப்போது நான், எதற்கு குழி தோண்டுகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர் ஊராட்சி மன்ற தலைவரிடம்தான் கேட்கவேண்டும் என சொல்லி விட்டு சென்றார். சிறிது நேரத்தில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.செல்வம், பாலு உள்ளிட்ட சிலர் அடியாட்களுடன் காரில் வந்து, இங்கு யாருக்கும் நான் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நான் வைத்ததுதான் இந்த ஊரில் சட்டம்.
என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று கூறிய அவர், என்னை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கீழே கிடந்த கருங்கல்லை எடுத்து கொலை வெறியுடன் என்னை தாக்க முயற்சித்து, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் எஸ்.கே.செல்வம், பாலு உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’என்று கூறியிருந்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட கமிஷனர், நடவடிக்கை எடுப்பதாக கூறினார். எஸ்.கே.செல்வம், அமமுக கட்சியின் சேலம் மாவட்ட செயலாளராகவும், மாநில பொருளாளராகவும் இருக்கிறார்.
The post திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார் appeared first on Dinakaran.