நள்ளிரவில் அதிவேகமாக சென்ற கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் விபத்தில் இறந்தவர்கள் கோவை, சிறுமுகை ஜடையம்பாளையத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
The post சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.