இந்நிலையில், அத்திமாஞ்சேரிப்பேட்டை கிராமம் உள்ளிட்ட பகுதிகளான பேருந்து நிலையம், அரசு அலுவலகங்கள், வீடுகளின் முன்பு நிறுத்தப்படும் இருச்சக்கர வாகனங்கள் கடந்த சில காலமாக திருடுபோவதாக பாதிக்கப்பட்டவர்களும், அப்பகுதி மக்களும் காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர். இப்புகார் குறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்ய காலதாமதப்படுத்துவதாகவும், இருச்சக்கர வாகனங்கள் திருடப்படும் சம்பவங்களை தடுக்கும் வகையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் போலீசார், வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post அத்திமாஞ்சேரிப்பேட்டையில் தொடரும் பைக் திருட்டு: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.