இன்று அதிகாலை பயங்கரம்; மீஞ்சூரில் வாலிபர் கொடூர கொலை:கைகளை துண்டு துண்டாக வெட்டி, முகம் சிதைப்பு

பொன்னேரி: மீஞ்சூரில் வாலிபரை கொடூரமாக கொலை செய்து கைகளை துண்டு துண்டாக வெட்டி, முகத்தை சிதைத்து உடலை போர்வையில் கட்டி சாலையில் மர்ம கும்பல் வீசியுள்ளது. இன்று அதிகாலையில் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியில் இன்று அதிகாலையில் பச்சை துணியால் இறுக்கமாக கட்டப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. அதன் அருகில் துண்டிக்கப்பட்ட கையும் கிடந்தது. உடல் மற்றும் கையை பார்த்ததும் அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சிலர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே அப்பகுதி மக்கள், மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆவடி துணை ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி ஆணையர் ராஜா ராபர்ட், மீஞ்சூர் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் காளிராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டு விசாரித்தனர். சடலமாக கிடந்தவருக்கு 30 வயது இருக்கும். இரு கைகளும் துண்டிக்கப்பட்டிருந்தது. ஒரு கை, தனியாக கிடந்தது. மற்றொரு கை, போர்வையால் இறுக்கமாக கட்டப்பட்டிருந்த உடலின் அருகிலும் கிடந்தது. முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் சரமாரியாக உடலை துண்டு துண்டாக வெட்டி, முகத்தை நசுக்கி கொலை செய்து உடலை வீசியுள்ளனர்.

சடலம் கிடந்த இடத்தில் ரத்தக்கறைகள் ஏதுவும் இல்லை. அதனால் வேறு ஒரு இடத்தில் கொலை செய்து விட்டு ஏதோ ஒரு வாகனத்தில் உடலை ஏற்றி பச்சை நிற போர்வையில் இறுக்கமாக கட்டி வீசி சென்றுள்ளது தெரியவந்தது.இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து கொலை செய்யப்பட்ட நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அதுபற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் காவல் நிலையங்களில் காணாமல் போனவர் பற்றிய புகார் ஏதாவது வந்துள்ளதா எனவும், சடலம் கண்டெடுக்கப்ப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும் விசாரித்து வருகின்றனர். சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் தனிப்படை அமைத்து மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் நேற்றிரவு பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்த வாலிபர் அசின் என்பவரின் தாய்க்கு செல்போனில் மிரட்டல் வந்துள்ளது. போனில் பேசியவர், ‘அசினை இரவில் கொலை செய்ய போகிறோம்’ என கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளனர். அவர் அதிர்ச்சியில் உறைந்தார். அதனால் கொலை செய்யப்பட்டவர் அசின்தானா அல்லது வேறு நபரா எனவும் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post இன்று அதிகாலை பயங்கரம்; மீஞ்சூரில் வாலிபர் கொடூர கொலை:கைகளை துண்டு துண்டாக வெட்டி, முகம் சிதைப்பு appeared first on Dinakaran.

Related Stories: