இதனிடையே நிதிமுறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சுர்ஜித் சிங் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் முதலமைச்சர் பதவியில் இருக்கக் கூடாது என்று தடை உள்ளதா என்று மனுதாரரிடம் பொறுப்பு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும்? பதவியில் இருந்து நீக்குவது குறித்து துணைநிலை ஆளுநர், குடியரசுத் தலைவர் தான் இதில் முடிவு செய்ய முடியும். டெல்லியில் நிர்வாக பிரச்சனை ஏற்பட்டால் குடியரசுத் தலைவர், ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்கள். டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது. முதலமைச்சராக கெஜ்ரிவால் தொடரும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
The post டெல்லி முதல்வரை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட முடியாது.. கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி..!! appeared first on Dinakaran.