கடந்த 20-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட 1,403 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாளாகும். 30ம் தேதி (நாளை மறுதினம்) மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் மேலும் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் தாக்கலான வேட்புமனுக்கள் மீது பரிசீலனை தொடங்கியது appeared first on Dinakaran.