இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவர் குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இக்குழு, ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று சுற்று கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது. மற்ற சங்கப் பிரதிநிதிகளுடன் அடுத்த சுற்று கருத்துக் கேட்பு நடைபெற வேண்டியுள்ளது. அதன் பின்னர் இப்பொருள் சார்ந்து விரிவான அறிக்கை பெற்று, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ஆசிரியர்களாகிய நீங்கள் தான் குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர் என்பதால் பள்ளிக் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
The post போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் வேண்டுகோள் appeared first on Dinakaran.