காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறுவதில் தாமதம்: அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும்.

டிச.2ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும். டிச.2ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும். தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தொடர்ந்து வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக அதே பகுதியில் நிலவி வருகிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்து வரும் 4 தினங்களுக்கு (இன்று முதல் 3-ந் தேதி வரை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறுவதில் தாமதம்: அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.! வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: