மீனவர் பிரச்சனை-பிரதமருக்கு முதல்வர் 76 கடிதம்: முதலமைச்சர்
இலங்கை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை மீட்க பிரதமருக்கு 76 முறை கடிதம் எழுதியுள்ளேன். தொடர் வலியுறுத்தல் காரணமாக இலங்கை சிறைகளில் இருந்து மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 23 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என முதலமைச்சர் கூறினார்.
4 ஆண்டுகளில் 1154 மீனவர்கள் மீட்பு: முதலமைச்சர்
தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால் 4 ஆண்டில் 1154 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க 125 விசைப்படகுகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கியுள்ளோம். சிறைபிடிக்கப்பட்ட 73 விசைப்படகுகளுக்கு ரூ.8 லட்சமும், நாட்டுப்படகுகளுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்பட்டது. மீனவர்களின் கண்ணீரை துடைக்கும் அரசாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது என்றார்.
திமுக ஆட்சியில் மீனவர் நலனுக்கு ஏராளமான திட்டங்கள்
மீனவர்கள் நல வாரியம் சார்பில் 19000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 29 மீன் இறங்குதள மேம்பாட்டு பணிகள் ரூ.88 கோடியில் முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மீனவ நலவாரியத்துக்கு இதுவரை ரூ.25.68 கோடி வழங்கப்பட்டுள்ளது. புதிய, மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளம் அமைப்பது குறித்து 12 ஆய்வுப் பணிகள் நடக்கிறது.
மீனவர் பிரச்சனைக்கு கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி: முதலமைச்சர்
மீனவர்களின் இன்னல்களை போக்க கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி. மீனவர்களின் நலனை காக்கவே கட்சத்தீவை மீட்க வேண்டும் என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.
மீனவர்கள் நலனுக்காக ரூ.1000 கோடியில் திட்டம்
மீனவர்கள் நலனுக்காக ரூ.1000 கோடியில் திட்டங்களை 2023ல் அறிவித்தேன். ரூ.1000 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கூறினார்.
மீனவர் தின உதவித் தொகை ரூ.500 ஆக உயர்த்தினோம்
மீனவர்கள் அண்டை நாடுகளால் சிறைபிடிக்கப்பட்டால் அவர்களது குடும்பத்துக்கு தினசரி உதவித் தொகை வழங்கப்படுகிறது. மீனவர் குடும்பத்துக்கு தின உதவித் தொகை ரூ.250ல் இருந்து ரூ.350ஆக உயர்த்தினோம் பிறகு ரூ.500 ஆக உயர்த்தினோம். மீன்வளத்தை அதிகரிப்பதற்காக 200 செயற்கை மீன் உரக்கடங்கள் நிருவப்பட்டுள்ளது.
மீனவர் நலனுக்காக தமிழ்நாடு ஏராளமாக செய்துள்ளது
மீனவர் நலனுக்காக தமிழ்நாடு அளவுக்கு எந்த மாநிலமும் செய்ததில்லை. மீனவர்கள் நலனுக்காக தமிழ்நாட்டை போல் வேறு எந்த மாநிலமும் செய்யவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
The post மீனவர்களை விடுவிக்க பிரதமருக்கு 76 கடிதம் எழுதியுள்ளேன்; தமிழ்நாடு அரசு முயற்சியால் 4 ஆண்டில் 1154 மீனவர்கள் மீட்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!! appeared first on Dinakaran.