கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வந்த பருவமழை குறைந்ததை தொடர்ந்து கோவை குற்றாலம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காணரமாகவே கோவை குற்றால அருவியில் அதிகளவிலான தண்ணீர் வரத்து இருந்தது. குற்றாலம் செல்லும் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும், பொதுமக்கள் அருவியில் குளிக்கும் பகுதியில் பெரிய அளவிலான குழி ஏற்பட்டது.
40 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் இன்று திறப்பு
