அரசு உத்தரவை மீறி திறந்திருக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

சென்னை: அரசு உத்தரவை மீறி திறந்திருக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தமிழகத்தில் இன்று அரசு உத்தரவை மீறி ஒரு சில தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது: கோடை வெயில் அதிகமாக இருப்பதையொட்டி பள்ளிகள் திறக்கும் தேதியை 7-ம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தோம்.

ஆனால் அதை மீறி தனியார் பள்ளிகள் திறந்திருந்தால் அந்த பள்ளிகளின் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வார்கள். சி.பி.எஸ்.இ. பள்ளிக் கூடங்கள் அதுவும் 10-ம் வகுப்புக்கு மேல் திறந்திருக்கலாம். தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக் கூடங்கள் திறந்திருந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் மாவட்டவாரியாக இதுபற்றி விசாரித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post அரசு உத்தரவை மீறி திறந்திருக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: