கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 19.2 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல், மார்ச் மாதங்களில் கோவையில் கடும் வெயில் அடித்ததன் காரணமாக சிறுவாணி நீர் மட்டம் 17 அடியாக குறைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கோவை குற்றாலம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post வெள்ளப்பெருக்கு அபாயம்; கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை appeared first on Dinakaran.