திருவெண்ணெய்நல்லூர், மார்ச் 27: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அருங்குருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் நடராஜன். இவர், அருங்குருக்கை கிராமத்தில் கரும்பு பயிரிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்புவதற்காக அவரது தோட்டத்தில் இருந்த கரும்புகளை வெட்டி லாரியில் ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பெண்ணைவலம் கரும்புக்கோட்ட அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் கரும்பு எடை போடுவதற்கான ட்ரிப்ஷீட் என்கின்ற எடை அனுமதிச்சீட்டு கொடுக்காமல் கடந்த 4 நாட்களாக அலைக்கழித்துள்ளனர்.
4 நாட்களாகியும் கொள்முதல் செய்யாததால் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் திடீர் சாலை மறியல்
