ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

 

கிருஷ்ணகிரி, ஆக.1: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கிருஷ்ணகிரி அணையிலிருந்து விநாடிக்கு 985 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  தென்பெண்ணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையில் திறந்து விடப்படும் நீரின் அளவை பொறுத்து, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 181 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 161 கனஅடியாக சரிந்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது நீர்மட்டம் 48.35 அடியாக உள்ளது. அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் வழியாக விநாடிக்கு 162 கனஅடி வீதமும், ஆற்றில் விநாடிக்கு 823 கனஅடி வீதமும் என மொத்தம் 985 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

 

Related Stories: