கிருஷ்ணகிரி சிவாஜிநகரில் பாண்டுரங்க ருக்மணி திருக்கல்யாண உற்சவம்

 

கிருஷ்ணகிரி, ஜூலை 31: கிருஷ்ணகிரி அக்ரஹாரம் சிவாஜி நகரில், பாண்டுரங்க ருக்மணி கோயிலில் 90ம் ஆண்டு பிரமோற்சவ விழா மற்றும் அம்பா பவானி தேவி கோயில் மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. நேற்று காலை ருக்மணி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முன்னதாக, ருக்மணி தாயார் பாண்டுரங்கனுக்கு பட்டு, நகை, மாலை, சீர்வரிசை அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

பக்தர்கள் பாடல் பாடி நடனம் ஆடினர். இதில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு, உற்சவ மூர்த்திகள் கிருஷ்ணகிரி நகரில் வலம் வந்து அருள்பாலித்தனர்.

Related Stories: