×

மல்லசமுத்திரத்தில் தொழிலாளி கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டாஸ்

 

மல்லசமுத்திரம், ஆக.4: மல்லசமுத்திரம் அருகே, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தறித்தொழிலாளி தனபால்(44). இவர் கடந்த ஆண்டு, மனைவியை வெட்டி கொலை செய்த வழக்கில் கைதாகி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வந்தார். கடந்த மாதம், மல்லசமுத்திரம் பஸ் நிலையம் அருகே, டாஸ்மாக் பாரில் நடந்த தகராறில், அவரை 2 பேர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இக்கொலை தொடர்பாக மல்லசமுத்திரம் போலீசார் விசாரணை நடத்தி, நாகர்கோவில் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த அஜித்(24), நேதாஜி தெரு கம்பத்தி கோவில் பகுதியை சேர்ந்த வீரமணி (25) ஆகியோரை போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், அவர்கள் 2 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, மல்லசமுத்திரம் போலீசார், நாமக்கல் மாவட்ட எஸ்பி யாதவ் கிரிஷ் அசோக்கிற்கு பரிந்துரை செய்தனர். இதைத் தொடர்ந்து, எஸ்பியின் பரிந்துரையை ஏற்று, அஜித், வீரமணி ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகல், சிறையில் உள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது.

Tags : Gundas ,Mallasamuthiram ,Dhanapal ,Mettupalayam ,
× RELATED கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா...