×

பகுதிநேர வேலை என்ற பெயரில் ஆன்லைனில் பணம் பறிக்கும் கும்பல்

 

நாமக்கல், ஆக.1: நாமக்கல் மாவட்டத்தில் பகுதிநேர வேலை என்ற பெயரில், ஆன்லைனில் பணம் பறிக்கும் கும்பல்களிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென ஏடிஎஸ்பி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கான சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று காலை நடைபெற்றது. இதற்கு சைபர் கிரைம் ஏடிஎஸ்பி விஜயராகவன் தலைமை வகித்து பேசியதாவது: சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க, அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

காவல்துறை, சிபிஐ, நீதிமன்றம், சுங்கத்துறை போன்ற அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறி வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். கல்வி உதவித்தொகை, பிரதான் மந்திரி திட்டத்தின் கீழ் நிதி உதவி கிடைக்கும் என வரும் அழைப்புகளை நம்ப கூடாது. இதில், யாரும் பணம் கட்ட வேண்டாம். பிளிப்கார்ட், அமேசான் போன்ற வடிவமைக்கப்பட்ட போலியான வலைதளங்களில் ஆன்லைனில் பொருட்கள் வாங்க பணம் கட்டினால் திரும்ப வராது.

 

Tags : Namakkal ,ADSP ,Namakkal Government Boys South Higher Secondary School ,
× RELATED ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும்