பாலக்காடு, ஆக. 4: மலம்புழா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான அகத்தேத்தரை அருகே வாக்கில்பொற்றாவை சேர்ந்த முருகன். இவரது மனைவி மாதவி (80). இவர் நேற்று மின்மோட்டாரை ஆன் செய்தார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப்பலனின்றி மூதாட்டி மாதவி பரிதாபகரமாக நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மலம்புழா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
