கூடலூர், ஆக 1: கூடலூரை அடுத்துள்ள கள்ளிங்கரை பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு வந்த மக்னா காட்டு யானையை நேற்று காலை பள்ளி மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் காலை நேரத்தில் வனத்துறையினர் சாலையில் விரட்டிச் சென்றதால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். கள்ளிங்கரை பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு வந்த மக்னா யானை சக்கிச்சி வயல் பகுதியில் முகாமிட்டிருந்தது. இந்த யானையை இரவு நேரத்தில் விரட்டும் நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டனர். எனும் யானை அங்கிருந்து செல்லவில்லை.
