கூகுளுக்கு ரூ. 9,500 கோடி அபராதம் விதித்த ஐரோப்பிய ஒன்றியம்

கூகுள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோரில் செயலி உருவாக்குநர்களை பாதிக்கும் வகையில் போட்டி செயலிகளுக்கு முரணான வணிக நடைமுறைகளைப் பின்பற்றியதாகக் குற்றம் சாட்டி, ஐரோப்பிய ஒன்றியம் சுமார் ரூ. 9,500 கோடி அபராதம் விதித்துள்ளது.

இதற்கு முன்பும், தனது ஆதிக்கத்தை போட்டி நெறிகளுக்கு மாறாகப் பயன்படுத்தியதாகக் கூறி, கூகுளுக்கு ரூ.38,000 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் புதுமையையும் நுகர்வோர் நலனையும் எதிர்மறையாகப் பாதிக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், அமெரிக்காவின் விமர்சனங்கள் மற்றும் அரசியல் அழுத்தங்களைப் பொருட்படுத்தாமல், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது போட்டியாளர்களை ஒடுக்குவதைத் தடுப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக இருப்பதை இந்த அபராத நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.

 

Related Stories: