அமெரிக்கா சாலை விபத்தில் 3 இந்தியர்கள் பரிதாப பலி: 2 பேர் படுகாயம்

கலிபோர்னியா: அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் தெலங்கானாவை சேர்ந்த 3 இந்தியர்கள் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் சைதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் நவீத். மனைவி நஸ்யா சல்மா. இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடியேறினர்.

இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கலிபோர்னியாவில், இவர்கள் பயணித்த கார், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இந்த சம்பவத்தில் நஸ்யா சல்மா, மகன் மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்தனர். ஷேக் நவீத் மற்றும் இளைய மகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: