தேனி, ஜூலை, 23: ேஹாட்டல்களை இரவு 11 மணிக்குள் மூட வேண்டும் என்ற நேர கட்டுப்பாட்டை வாபஸ் பெற வேண்டும் என, ேஹாட்டல்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்ட ஹோட்டல், பேக்கரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தேனியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஹாட்டல்கள் சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் பொன் முருகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சுப்பிரமணி வரவேற்று பேசினார்.
