நீலகிரி மாவட்டத்தில் பராமரிப்பின்றி பாழாகும் பயணிகள் நிழற்குடைகள்

 

ஊட்டி, ஜூலை 24: நீலகிரி மாவட்டத்தில் மலைப்பாதை மற்றும் கிராமப்புறங்கள், நகர்புறப்பகுதிகளில் பேருந்திற்காக காத்திருக்கும் பொதுமக்களின் வசதிக்காக மக்கள் பிரதிநிதிகளின் தொகுதி வளர்ச்சி நிதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டன. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால் பல இடங்களில் உள்ள நிழற்குடைகளின் மேற்கூரைகள் உடைந்தும், இருக்கைகள் உடைந்தும் சேதமடைந்து காணப்படுகின்றன.
மழைக்காலங்களில் இவற்றிற்குள் நிற்க முடியாத அளவிற்கு தண்ணீர் கசிவதுடன், புதர்கள் மண்டிச் சுகாதாரமற்று கிடக்கின்றன.

 

Related Stories: