மழைக்காலங்களில் மண் அரிப்பை தடுக்க படிமட்டம் முறையில் காய்கறி விவசாயம்

 

ஊட்டி, ஜூலை 24: ஊட்டி அருகேயுள்ள தலைகுந்தா காந்திநகர் மற்றும் குளிச்சோலை போன்ற பகுதிகளில் மண் அரிப்பை தடுக்க மலைச் சரிவுகளில் படிமட்டம் முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் பெரும்பாலான விவசாய நிலங்கள் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ளன. இங்கு உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் மற்றும் பூண்டு ஆகியவைகள் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த காய்கறிகளை மலைச்சரிவுகளில் பயிரிடும்போது, மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு அங்கு பயிரிடப்பட்டுள்ள மலை காய்கறிகள் தண்ணீரில் அடித்துச் செல்லும். இதனால், மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் படிமட்டம் அமைக்கப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Related Stories: