- பிரசாந்த்
- தேவ்சம்போர்ட்
- சபர்மதி அய்யப்பன் கோயில்
- திருவனந்தபுரம்
- திருவந்தங்கூர் தேவசம்போர்டு
- பி. எஸ். பிரசாந்த்
- சிறப்பு புலனாய்வு நிறுவனம்
- உட்கார
- கேரள உயர் நீதிமன்றம்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பி.எஸ். பிரசாந்த் இன்று காலை சிறப்பு புலனாய்வு அமைப்பால் (SIT) கைது செய்யப்பட்டுள்ளார்.கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த வழக்கை விசாரித்து வரும் குற்றப்பிரிவு போலீசார், திருவனந்தபுரத்தில் உள்ள பிரசாந்தின் இல்லத்திற்குச் சென்று அவரைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்
2019 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் சபரிமலை கோயிலின் கருவறை கதவுகள் மற்றும் துவார பாலகர்கள் சிலைகளுக்கு தங்க முலாம் (Electroplating) பூசும் பணியின் போது, கோயிலுக்குச் சொந்தமான தங்கம் முறைகேடு செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கில் நம்பிக்கை மோசடி மற்றும் கூட்டுச்சதி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரசாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்
தனது கைதுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு முகநூலில் (Facebook) பதிவிட்ட பிரசாந்த், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். முந்தைய காலகட்டத்தில் நடந்த தங்கம் திருட்டைத் தனது தேவசம்போர்டு நிர்வாகமே வெளிக்கொண்டு வந்ததாகவும், தற்போதைய நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தங்கம் திருட்டு வழக்கில் ஏற்கனவே சபரிமலை முன்னாள் அதிகாரிகள் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்து வருகிறது.
