திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 77,874 பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 35,302 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயிலில் உள்ள உண்டியல்களில் ரூ.4.92 கோடி காணிக்கை கிடைத்துள்ளது. 4.16 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 2.63 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதால் பக்தர்கள் வெளியே சிலாதோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் இவர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய சுமார் 20 முதல் 24 மணி நேரமாகும். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்றவர்கள் 8 மணி நேரத்திலும் சுவாமி தரிசனம் செய்தனர்.
