×

டெல்லியில் போராட்டம்: பிரதமரின் அறிவிப்பை நிராகரித்து ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP வலியுறுத்தல்!

டெல்லி: வினாத்தாள் கசிவு விவகாரத்தை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிராகரித்துள்ளது. பிரதமரின் X தள பதிவை குறிப்பிட்டு பேசிய CJP, இந்த முறைகேட்டிற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகளை விட பொறுப்பானவர்களின் பதவி விலகலே முதன்மையானது என அக்கட்சி தனது கோரிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இதனையடுத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது போராட்டம் நேற்று 33வது நாளை எட்டியது.

இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. கடந்த 20-ந் தேதி இந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பாஜகவுக்கு பெரிய சவாலாக அமைந்தது. போலீஸ் தடியடியில் பல இளைஞர்கள் காயமடைந்த பிறகும் ஜந்தர் மந்தரில் இன்னும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : Delhi ,CJP ,Union ,Education Minister ,PM ,Cockroach Janata Party ,Union Education Minister ,Dharmendra ,
× RELATED சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம்...