- தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
- ஆண்டிப்பட்டி
- அகில இந்திய ஆசிரியர் கூட்டணி
- ஆண்டிப்பட்டி மாவட்டம்
- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டணி
- ஆண்டிப்பட்டி மாவட்டக் கல்வி அலுவலகம்…
ஆண்டிபட்டி, ஜூலை 23: அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் செயல் திட்டத்தின்படி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆண்டிபட்டி வட்டாரக்கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆண்டிபட்டி வட்டார கல்வி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் முருகானந்தன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சுகுணா மற்றும் மாவட்ட துணைத்தலைவர் சுந்தரபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளரும் மாவட்ட செயலாளருமான சரவணமுத்து சிறப்புரையாற்றினார். நிறைவாக வட்டார பொருளாளர் ஆதிமூலம் நன்றியுரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். இதற்கான சட்டத் திருத்தங்களை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தகுதித் தேர்வு கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஜூலை மாதம் நடைபெற்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40% மதிப்பெண் என நிர்ணயிக்க வேண்டும்.பணியில் உள்ள ஆசிரியர்களின் பணி அனுபவத்திற்கு ஏற்ப கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
