×

பெண்ணிடம் நகை, பணம் அபேஸ்

தேனி, ஜூலை 23: திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பதர்நிஷா (60). இவர் தேனி மாவட்டம் உத்தமபாளையம் உள்ள இவரது மகள் வீட்டிற்கு வந்துவிட்டு, நேற்று உத்தமபாளையத்தில் இருந்து திண்டுக்கல் செல்வதற்காக அரசு பஸ்ஸில் ஏறி தேனி பழைய பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கினார். பஸ்ஸில் இருந்து இறங்கியதும் அவரது கை பையை பார்த்தபோது கைப்பையில் இருந்த ஒன்றரை பவுன் மதிப்புள்ள மூன்று மோதிரங்கள் ரூ.12 ஆயிரம் ரொக்க பணம், ஏடிஎம் கார்டு ஆதார் கார்டு பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொண்ட மணி பர்ஸ் காணாமல் போனது தெரிய வந்தது. ஓடும் பஸ்ஸிலேயே இவரது கைப்பையில் வைத்திருந்த பணப்பையை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பதர் நிஷா தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Theni ,Patharnisha ,Sithaiyankottai ,Dindigul district ,Uttampalayam, Theni district ,Uttampalayam ,Dindigul ,Theni Old Bus Terminal ,
× RELATED ஏரியில் வண்டல் மண் எடுப்பதை கண்டித்து...