×

இங்கிலாந்து அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேருக்கு அமைச்சர் பதவி

லண்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனிஷ்கா நாராயண், லிசா நந்தி ஆகியோர் இங்கிலாந்தின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆண்டி பர்ஹம் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய அமைச்சரவையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனிஷ்கா நாராயண், லிசா நந்தி ஆகிய இருவருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பீஹாரின் முசாபர்பூரில் பிறந்த கனிஷ்கா நாராயண், தன் 12வது வயதில் பிரிட்டனின் கார்டிப் நகருக்கு பெற்றோருடன் குடிபெயர்ந்தவர். ஆக்ஸ்போர்டு பல்கலையில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதார படிப்பு முடித்தவர். இவர் பிரிட்டனின் முதல், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். முன்னாள் பிரதமர் ஸ்டார்மர் அமைச்சரவையில் கலாசாரத் துறை அமைச்சராக பணியாற்றிய லிசா நந்தி, புதிய அமைச்சரவையிலும் அதே பொறுப்பில் நீடிக்கிறார். மான்செஸ்டரில் பிறந்த லிசா நந்தியின் தந்தை தீபக் நந்தி, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்.

Tags : Minister ,UK Cabinet ,London ,Kanishka Narayan ,Lisa Nandi ,UK ,Andy Parham ,
× RELATED சிங்கப்பூரில் வைரத்தை திருடி வசமாக சிக்கிய 2 இந்தியர்கள்!