×

சீனாவில் இயற்கைப் பேரிடரில் இருந்து தப்பிக்க நேரடி சிறப்பு பயிற்சி மையம்

ஹாங்சோ: சீனாவின் ஹாங்சோ நகரில், புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில், மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் வீசும் செயற்கை புயல் காற்று மற்றும் பெரிய அலைச் சுழல் போன்ற சூழல்கள் உருவாக்கப்பட்டு, அவற்றிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக தப்பிப்பது என்பது குறித்து மக்களுக்கு நேரடி பயிற்சி அளிக்கப்படுகிறது.

காலநிலை மாற்றத்தால் இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 1.6 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த பயிற்சி மையத்தில் பங்கேற்று பயிற்சி பெற்றுள்ளனர்.

சூறாவளி அல்லது திடீர் வெள்ளத்தில் சிக்கி கொள்வது போன்ற இக்கட்டான சூழலை இந்த மையம் தத்ரூபமாக அனுபவிக்க செய்கிறது; மக்கள் சிறப்பு பயற்சி பெறும் போது சிறப்புப் பாதுகாப்பு உடை (wetsuit) மற்றும் தலைக்கவசம் வழங்கப்படுகிறது. பயிற்சி பெறுவோருக்கு வழிகாட்ட பாதுகாப்புப் பயிற்றுவிப்பாளர்கள் இங்குள்ளனர். அதே போல சூறாவளிக்கான பயிற்சியை வழங்கும் உலகின் முதல் மையம் இதுவே என்றும் நாங்கள் இங்கு மணிக்கு 103 மைல் வரையிலான வேகத்தில் வீசும் காற்று மற்றும் பெருமழையுடன் கூடிய பயிற்சியை வழங்குகிறோம் என்றும் மைய நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

Tags : China ,Hangzhou ,Hangzhou, China ,
× RELATED சிங்கப்பூரில் வைரத்தை திருடி வசமாக சிக்கிய 2 இந்தியர்கள்!