டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தினுள் நுழையாமல் தடுக்கவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைக்கவும் காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.
ஆயுதம் ஏந்திய துணை ராணுவம் நாடாளுமன்ற வளாகத்தை மூடிய நிலையில், வளாகத்திற்கு அருகே இருக்கும் ரிசர்வ் வங்கி முன் திரண்ட போராட்டக்காரர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராகவும், நீட் முறைகேடுக்கு பொறுப்பேற்றும் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.
நாடாளுமன்றம் நோக்கி கரப்பான்பூச்சி கட்சியினர் பேரணி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் , உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் போராட்டத்திற்கு பணிந்து தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கரப்பான் பூச்சி கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்வதால் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட பரபரப்பு காரணமாக, முன்னெச்சரிக்கையாக குடியாசு தலைவர் மாளிகை வாயில்களும் மூடப்பட்டுள்ளது.
