×

சிக்கிம் மாநிலத்தில் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு

 

சிக்கிம் : சிக்கிம் மாநிலம் நாம்ச்சி மாவட்டத்தில் கட்டுமானப் பணியில் இருந்த நீர்மின் திட்ட சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 18-க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கியுள்ளனர்.

டீஸ்டா ஸ்டேஜ்-VI (Teesta Stage-VI) நீர்மின் திட்டத்தின் கீழ் சாமர்துங் பகுதியில் படேல் இன்ஜினியரிங் நிறுவனம் இந்த சுரங்கப்பாதையை அமைத்து வந்தது. நேற்று மதியம் சுரங்கத்தின் உட்பகுதியில் ஏற்பட்ட மீத்தேன் வாயு கசிவு மற்றும் வெடிவிபத்து காரணமாக இந்த பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் முற்றிலும் அடைபட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை மாநில பேரிடர் மீட்புப் படை மாவட்ட காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்ட போதிலும், சுரங்கப்பாதையின் உட்பகுதியில் இருந்து ஆபத்தான மீத்தேன் வாயு கசியத் தொடங்கியுள்ளது மீட்புக் குழுவினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

வாயு கசிவு காரணமாக உள்ளே செல்ல முயன்ற சில மீட்புப் படை வீரர்களுக்கு தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் மீட்புப் பணிகள் மிகவும் கவனத்துடன் உச்சக்கட்ட எச்சரிக்கையுடனும் மெதுவாக நடத்தப்பட்டு வருகின்றன. வாயுவின் அளவுதொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் சிக்கியவர்களில் 7 தொழிலாளர்களின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டு சிங்க்டாம், நம்சி மற்றும் கேங்டாக் STNM அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. விபத்து நடந்தபோது உள்ளே இருந்த சுமார் 27 தொழிலாளர்களில், எஞ்சிய 18 பேர் இன்னும் சுரங்கத்திற்குள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் சிக்கிம் போலீசார் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், சுரங்கத்தின் உள்ளே தொடர்ந்து கசிந்து வரும் நச்சு மீத்தேன் வாயு மற்றும் போதிய ஆக்ஸிஜன் இல்லாமை காரணமாக மீட்புக் குழுவினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மீட்புப் பணி தொய்வடைந்துள்ளது

Tags : Sikkim ,Namchi ,
× RELATED 2026-2027ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் ஆக.5ம்...