×

பொள்ளாச்சியில் நீர்வளத்துறையில் அறிவிக்கப்பட்ட 22 டெண்டர்கள் ரத்து

 

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நீர்வளத்துறையில் அறிவிக்கப்பட்ட 22 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீர்வளத்துறையின் பொள்ளாச்சி பிரிவில் ஓபன் டெண்டராக இன்றி லிமிடெட் டெண்டர் ஆக விடப்பட்டுள்ளது. சான்றிதழ் பெற ஒப்பந்ததாரர் நேரில் வரக் கூடாது என்ற நிலையில் நேரில் வர வேண்டும் என அறிவுத்தப்பட்டது.

இந்த டெண்டர் நடைமுறைகளில் கடுமையான விதிமீறல்கள் மற்றும் சில குறிப்பிட்ட நபர்களுக்கு சாதகமாக முறைகேடுகள் (Favouritism) நடப்பதாகத் திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி பகுதி அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் குற்றம் சாட்டியது. விதிகளை முறையாகப் பின்பற்றாமல் விடப்பட்ட டெண்டர்கள் எவை என்றாலும் அவை எவ்வித தயவுதாட்சன்யமும் இன்றி உடனுக்குடன் ரத்து செய்யப்படும் என்ற கடுமையான கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி நீர்வள ஆதாரத்துறையின் கீழ் கோயம்புத்தூர் பகுதி பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி ஆழியாறு வடிநிலக் கோட்டத்தின் சார்பில் விடப்பட்டிருந்த டெண்டர்கள் தீவிரமாகச் பரிசீலிக்கப்பட்டன. இதில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் அல்லது வெளிப்படைத்தன்மை இல்லாமல் மேற்கொள்ளப்பட்டதாகக் கண்டறியப்பட்ட மொத்தம் 22 டெண்டர்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் பதிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன

அரசு ஒப்பந்தங்களைப் பெறுவதில் எந்தவித சிபாரிசுகளுக்கும் இடமில்லை என்றும், முறைகேடுகளுக்குச் சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமளிக்கப் போவதில்லை என்றும் இந்த அதிரடிச் செயல் மூலம் அரசு திட்டவட்டமாக உணர்த்தியுள்ளது. விதிகள் மட்டுமே இறுதி மற்றும் எந்தச் சூழலிலும் சட்டத்திற்கு உட்பட்டு மட்டுமே டெண்டர்கள் ஒதுக்கப்படும் என்ற நிலைப்பாடு contractors மற்றும் அதிகாரிகளிடையே ஒரு நடுக்கத்தையும் அதே நேரத்தில் நேர்மையானவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக இதுபோன்ற அரசு டெண்டர்களில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்து வந்த குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் துறையின் செயல்பாடுகள் மாறியுள்ளன. நீர்வள ஆதாரத்துறையின் கீழ் உள்ள பல்வேறு பராமரிப்புப் பணிகள், கால்வாய் தூர்வாருதல் மற்றும் சிறப்புப் பழுதுபார்ப்புப் பணிகள் தொடர்பான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம், அரசு நிதியைத் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் விதிமீறல்கள் எங்கு நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை பாயும் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

காடு மற்றும் செடி கொடிகளை அகற்றுதல், சரிந்த மண்ணை அள்ளுதல் போன்ற பணிகளுக்கான இந்த ஆன்லைன் டெண்டர்களில், ‘தளப் பார்வையிடல் சான்றிதழ்’ (Site Visit Certificate) கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இது பரவலான எதிர்ப்பை ஏற்படுத்தியது. ஒப்பந்ததாரர்களின் புகார்களைத் தொடர்ந்து, நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு (DVAC) மனுக்கள் அனுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த 22 டெண்டர்களையும் ரத்து செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Pollachi ,Water Resources Department ,
× RELATED பிரதமர் இல்லம் முன் போராட்டம்: ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது!