×

போலீஸா இல்ல பேட்டை ரவுடியா..? இப்படி சண்டைக்கு நிற்கலாமா.!! நயினார் கண்டனம்

சென்னை: முதல்வர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி போலீசால் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயனிடம் பேட்டி எடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்களை தூத்துக்குடி மாவட்ட ADSP தாக்க முற்பட்டதோடு, நாக்கைத் துருத்திக் கொண்டு அவர்களை “வாடா, போடா” என ஒருமையில் பேசினார்.

இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலானதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் காவல் அதிகாரி திபுவின் செயல் நாகரிகமற்றது, கண்டனத்திற்குரியது என கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது. காக்கிச் சட்டைக்கென்று ஒரு தனி மரியாதையும், கண்ணியமும் உண்டு என்பதை மறந்து விட்டு, காவல்துறையின் உயரிய பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரியே “பேட்டை ரவுடி” போல இப்படி பொதுவெளியில் சண்டைக்கு நிற்பது ஒட்டுமொத்த காவல்துறையின் பிம்பத்தையும் சிதைத்து விடும் என கடுமையாக சாடி உள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தில் தொடரும் லாக்-அப் மரணங்களால், காவல்துறையின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையும், பாதுகாப்புணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வரும் நிலையில், காவல்துறையினர் மிகுந்த கவனத்துடன் தங்களது “Decorum”-மை கடைபிடிக்க வேண்டும்.

மேலும், காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்வர், காவல்துறையை வெறும் “ஏவல்துறை”யாக மட்டும் பயன்படுத்தக் கூடாது எனவும், ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத் துறையின் அடிப்படை உரிமைகள் மீது தொடரும் இதுபோன்ற அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

 

Tags : Nayinar ,Chennai ,Thoothukudi district ,ADSP ,Vilathikulam ,MLA ,Markandeyan ,Chief Minister ,Poda ,
× RELATED கரூரில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலி;...