லாலாப்பேட்டை, ஜூலை 18: லாபேட்டையில் கஞ்சா வைத்திருந்த நபரை போலீசார் கைது கரூர் மாவட்டம் லாலாபேட்டை காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்த சக்திவேல் (22). என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பயன்படுத்தியுள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபடுந்த லாலாபேட்டை போலீசார் கஞ்சா புகைப்பதை கண்டு அவரை கைது செய்து அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்கு பதி செய்து விசாரிக்கின்றனர்.
