கரூர் பகுதிகளில் சாக்கடை வடிகால் அமைக்க வலியுறுத்தல்

கரூர், ஜூலை 16: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடிகால் வசதி அமைக்காத பகுதிகளில் விரைந்து சாக்கடை வடிகால் அமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.கருர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர் மற்றும் இனாம்கரூர் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தாந்தோணிமலை, சணப்பிரட்டி ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தாந்தோணிமலை, சணப்பிரட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான தெருக்களில் இதுநாள் வரை வடிகால் வசதி அமைக்காமல் உள்ளது. இதன் காரணமாக கழிவு நீர் சாலையில் கலந்து பல்வேறு தொந்தரவுகளை ஏற்படுத்தி வருகிறது.எனவே, இதுபோன்ற பகுதிகளை பார்வையிட்டு, சாக்கடை வடிகால்கள் அமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை வடிகால் வசதி இல்லாத இடங்களில் விரைந்து அதற்கான வசதிகளை ஏற்படுத்தி தர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Related Stories: