கிருஷ்ணராயபுரம், ஜுலை. 17: கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியை பாராட்டு பரிசு வழங்கினார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டி மஞ்சமநாயக்கன்பட்டி அமுதசுரபி பள்ளியில் நடைபெற்றது. இதில் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட லட்சுமணம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவி சிவ, என்பவர் 11 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 3ம் இடம் பெற்றுள்ளார். மேலும் மாணவி மாவட்ட அளவில் நடைபெற உள்ள சதுரங்க போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவி சிவயை பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி மற்றும் உதவிய ஆசிரியர் பத்ரிநாதன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.
