×

ஓமந்தூரார் மருத்துவமனையில் அதி அழுத்த பிராணவாயு சிகிச்சை பிரிவை கில்லி பட ஒளிபரப்புடன் தொடங்கி வைத்த அமைச்சர் அருண்ராஜ்

 

சென்னை: சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் கை சீரமைப்பு மற்றும் நுண் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் ரூ.2 கோடி மதிப்பிலான அதிஅழுத்த பிராண வாயு சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண் ராஜ் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்த சிகிச்சை முறையில், அதிக அழுத்தத்தில் தூய ஆக்சிஜனை நோயாளிகள் சுவாசிக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் காயங்கள் விரைவாக ஆறுதல், தீக்காயங்கள், கடுமையான தொற்றுகள் மற்றும் விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க முடியும்.

சுமார் ரூ.1.50 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முற்றிலும் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. நோயாளிகளுக்கு அதிஅழுத்த பிராண வாயு வழங்க முழுமையாக 2 மணி நேரம் ஆகும் எனக் கூறப்படுகிறது. எனவே, அந்த நேரத்தை கழிக்க சிறிய டிவி மூலம் படங்கள் திரையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கில்லி திரைப்பட ஒளிபரப்புடன் அதி அழுத்த பிராணவாயு சிகிச்சைப் பிரிவை அமைச்சர் அருண்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.

Tags : Minister ,Arunraj ,Hyperbaric Oxygen Therapy Unit ,Omandurar Hospital ,Ghilli ,Chennai ,Department of Public Health ,Hand Rehabilitation and Microsurgery Unit ,Tamil Nadu Government Multi-Specialty Hospital ,Omandurar Government Estate, Chennai ,
× RELATED பெற்றோரை தாக்கி சிறுமி கடத்தல்: திருத்தணியில் புகார் பெற மறுப்பு