×

உடுமலை அருகே துணிகரம்: தம்பதியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.45 ஆயிரம் கொள்ளை

உடுமலை, ஜூலை 17: உடுமலை அருகே உள்ள ராவணாபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (49). இவரது மனைவி பிருந்தா (40). இவர்களது மகன் சர்வேஷ் (13). பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படிக்கிறார். நேற்று அதிகாலை அருண்குமாரும், பிருந்தாவும் தோட்டத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். வெளியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அருண்குமார் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி, பீரோவில் இருந்த 45 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தார். பின்னர், இருவரையும் வீட்டுக்குள் வைத்து வெளியில் பூட்டிவிட்டு தப்பினார். அதே பகுதியை சேர்ந்த நபர் நடைபயிற்சிக்கு அவ்வழியாக வந்தபோது, தம்பதியின் சத்தம் கேட்டு வந்து கதவை திறந்தார். அதன்பிறகே நடந்த சம்பவம் தெரியவந்தது. இது குறித்து அருண்குமார் அளித்த புகாரின்பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று விசாரித்தனர்.

Tags : Udumalai ,Arunkumar ,Ravanapuram ,Brinda ,Sarvesh ,Pollachi ,
× RELATED பூ மார்க்கெட் வாடகை விவகாரம் இருதரப்பு புகாரில் 8 பேர் மீது வழக்கு