திருப்பூர், ஜூலை 17: திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆல்வினர் ஏஞ்சல் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி, பேச்சு போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் போதை இல்லா தமிழகமாக மாற்ற ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்வில் காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி அவரது வரலாறு, வாழ்க்கை நடைமுறை, அவர் செய்த சாதனைகள் மற்றும் மக்களுக்கு செய்த பணிகளை முதல்வர் டாக்டர் ஆர்.பி.தங்கராஜன் எடுத்துரைத்தார். இதில் முன்னாள் மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர் கலந்து கொண்டனர்.
