கத்தி முனையில் வாலிபர் கடத்தல்

மதுரை, ஜூலை 16: மதுரை, அம்பிகைநகர் கோமதிபுரம் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜாசிவசுந்தர்(35). இவருக்கும் விருதுநகரில் உள்ள கலைஞர்நகரை சேர்ந்த வெற்றிவேல்முருகன்(29), காரியாபட்டியை சேர்ந்த குமரேசன்(36) மற்றும் சக்திவேல்(24) ஆகியோருக்கும் இடையே வணிக ரீதியிலான பணப்பரிவர்த்தனை தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று கோமதிபுரத்தில் உள்ள ராஜாசிவசுந்தரின் வீட்டிற்கு வந்த வெற்றிவேல் முருகன் உள்ளிட்ட மூவரும் சேர்ந்து, கத்தியை காட்டி மிரட்டி அவரை கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவரது மனைவி சுகன்யா(29), அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ஆள் கடத்தலில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: