கம்பம் ஜூலை 9: கம்பத்தில் உள்ள விடுதியில் 15 வயது மாணவி மாயமானதாக கம்பம் தெற்கு போலீசாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் போலீசார் தேனி மாவட்டம் முழுவதும் உள்ள பஸ் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சியினை ஆய்வு செய்தனர் அப்போது தேனி புதிய பஸ் நிலையத்தில் மாணவி டீக்கடை ஒன்றில் பணிபுரியும் ஊழியரிடம் செல்போனை வாங்கி பேசும் காட்சியும், சிறிது நேரத்தில் அந்த மாணவியை டீக்கடை ஊழியர் டூவீலரில் அழைத்துச் செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.
