மளிகை கடைகளில் 49 கிலோ குட்கா பறிமுதல்

 

சேந்தமங்கலம், ஜூலை 9: கொல்லிமலையில் மளிகைக் கடைகளில் அதிரடி சோதனை நடத்தியதில், 49 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கொல்லிமலையில் உள்ள மளிகை கடை, டீக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் மதுபாலக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர், நேற்று கொல்லிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து மளிகைக் கடைகளிலும் திடீர் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

 

Related Stories: