இந்தாண்டு இதுவரை 87 பேர் மீது குண்டாஸ்

 

தூத்துக்குடி, ஜூலை 9: தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு இதுவரையில் 87 பேர் குண்டர் தடுப்பு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மேலசண்முகபுரத்தை சேர்ந்த சங்கர் மகன் சேர்மக்குமார் (24), சேர்மராஜா என்ற ராஜா மகன் சரவணன் என்ற சரவணக்குமார் (23), தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார்புரத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன் அருண்குமார் (20) ஆகியோரை தொடர் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதாக மத்திய பாகம் போலீசார் கைது செய்தனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா பரிந்துரை செய்தார். அதன்பேரில் சேர்மக்குமார், சரவணன் என்ற சரவணக்குமார், அருண்குமார் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் விஷூ மகாஜன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், பாளை. மத்திய சிறையில் வழங்கினார்.

Related Stories: