புகையிலை விற்றவர் கைது

 

போடி, ஜூலை 9: போடி நகர் காவல்நிலைய எஸ்.ஐ. குருகவுதம் மற்றும் போலீசார் நகரில் ரோந்து சென்றனர். அப்போது, சன்னாசிபுரம் செட்டு பகுதியில் பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது கடையில் இருந்த அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கடை உரிமையாளரான போடி புதூரைச் சேர்ந்த சார்லஸ்குமார் (24) என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: