கொடைக்கானல் மலைச்சாலையில் காரில் ஆபத்தான முறையில் பயணிக்கும் வாலிபர்கள்: பெண்களை கேலி, கிண்டல் செய்து அட்ராசிட்டி

 

கொடைக்கானல், ஜூலை 9: கொடைக்கானல் மலைச்சாலையில் கார் ஜன்னலில் அமர்ந்தபடி ஆபத்தான முறையில் பயணிக்கும் வாலிபர்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. இவர்களில் சிலர் சாலையில் செல்லும் பெண்கள் உள்ளிட்ட மற்ற வாகன ஓட்டிகளை கேலி, கிண்டல் செய்து அட்ராசிட்டியில் ஈடுபடுகின்றனர். கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதற்காக வத்தலக்குண்டு மற்றும் பழநி மலை சாலைகளை சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

கொடைக்கானல் மலைச்சாலையில் குளிர்ந்த சூழலை அனுபவிப்பதில் தவறில்லை. ஆனால், மலைச்சாலையில் கார் உள்ளிட்ட வாகனங்களின் ஜன்னல்கலில் அமர்ந்து வாலிபர்கள் சிலர் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். நேற்று முன்தினம் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் கொடைக்கானல் நோக்கி வந்த காரின் ஜன்னலில் அமர்ந்து ஆபத்தான முறையில் இளைஞர் ஒருவர் பயணம் மேற்கொண்டார். மேலும், அவர் அந்த வழியாக டூவீலரில் சென்ற பெண்களை கேலி கிண்டல் செய்தும் அட்ராசிட்டியில் ஈடுபட்டார்.

 

Related Stories: