கிராமப்புறங்களில் சேதமடைந்துள்ள மினி குடிநீர் தொட்டிகள் சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

புதுக்கோட்டை, ஜூலை 2: புதுக்கோட்டை மாவடத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள சேதமடைந்த குடிநீர் தொட்டிகளை சீரமைத்து வழக்கம் போல் குடிநீர் வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 450க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் உள்ளது. இந்நிலையில் கிராம மக்களின் குடிநீர் தேவைக்கு ஏற்ப பல்வேறு பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்கு மினி குடிநீர் தொட்டியை பஞ்சாயத்து நிர்வாகம் அமைத்தது. இதனை அந்தெந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி தண்ணீர் பிடித்து வந்தனர். இந்நிலையில் பல தொட்டிகள் பழுதடைந்ததுள்ளது. இதனை அந்தெந்த பஞ்சாயத்து நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. தற்போது இந்த சிறு மின்விசை குடிநீர் தொட்டி செயல்படாமல் கிடக்கிறது.

குறிப்பாக குடிநீர் டேங் மற்றும் ஆழ்குழாய் கினற்றில் இருந்து குடிநீர் தொட்டிக்கு தண்ணீரை கொண்டு வரும் பைப்புகள், மோட்டாரை இயக்க பயன்படும் மின்ஒயர்கள் அனைத்தும் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதி வாசிகள் குடிநீருக்காக வேறு இடத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் அந்த பகுதி வாசிகள் தண்ணீருக்காக பல்வேறு சிறமங்களை அனுபவித்து வருகின்றனர். மேலும் தண்ணீர் காசுகொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் சென்றுள்ளனர். இதனால் பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர்கள் அந்தெந்த ஒன்றியங்களில் உள்ள பஞ்சாயத்துகளில் ஆய்வு செய்து எங்கெல்லாம் மினி குடிநீர் தொட்டிகள் சேதமடைந்துள்ளதை முறையாக கணக்கு எடுத்து விரைந்து சரிசெய்து வழக்கம்போல் குடிநீர் வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: